பட்டிமன்ற தலைப்பு : மனிதனுக்கு அதிக சுகம் தருவது எது? இரவில் தூங்குவதா? பகலில் தூங்குவதா? நடுவர் கந்தகன் : வந்திருக்கும் அனைத்து மக்களுக்கும், ஊர் விழா கமிட்டி குழுவினருக்கும் எங்கள் பட்டிமன்றக் குழுவினரின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இரவின் குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பளியும், குல்லாவுமாய்க் கண்ணப்படும் பாட்டி, தாத்தாக்களே, மாங்கல்ய வரி கட்டி எமக்கு இம்மாதத்தை மங்கலமாக்கிய தாய், தந்தையரே, சும்மா பட்டிமன்றத்தை வேறு வழியில்லாமல் பார்க்க வந்திருக்கும் இளசுகளே, இன்னும் சற்று நேரத்தில் தூக்கம் காணும் வண்டு, சிண்டுகளே உங்கள் அனைவர்க்கும் வணக்கம். வேலை, உணவு, உறக்கம் இப்படித்தான் நாம் ஆண்டாண்டுகாலம் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆதியில், வெறும் உணவும், உறக்கமும் தான் பின் நாகரிக மாற்றத்தால் வேலை வந்து ஒட்டிக்கொண்டது. நம்மால் தூங்காமல் இருக்கவே முடியாது. ஆமா வா? இல்லையா?...ஆனாதானே? இப்படியிருக்க, துக்கத்தைப் பற்றி தான் நாம் இந்த பட்டிமன்றத்தில் பேசப்போகிறோம். தலைப்பு என்னவென்றால், "மனதனுக்கு அதிக சுகம...
Comments
Post a Comment